விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஆட்சிமன்றக் குழு நேர்காணல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஆட்சிமன்றக் குழு நேர்காணல் நடத்தி வருகிறது.

காலியாக உள்ள இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெறப்பட்டது. இந்நிலையில், விருப்ப மனுக்கள் பெறும் பணி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி மன்றக் குழு முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.

Exit mobile version