நடந்து முடிந்தது அதிமுக வேட்பாளர் விருப்ப மனு நேர்காணல்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணல் முடிவுற்றது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக ஆட்சிமன்றக் குழு நேர்காணல் நடத்தியது. காலியாக உள்ள இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெறப்பட்டது. விருப்ப மனுக்கள் பெறும் பணி மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழு, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர்.

Exit mobile version