கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவனை எரித்துக்கொன்ற மனைவி!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே எரித்து கொலை செய்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் இடையன்குளம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது டிஎன்ஏவை பரிசோதித்ததின் அடிப்படையில், கூடலூரை சேர்ந்த நாகராஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். நாகராஜின் மனைவி முத்துமாரியிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் மிகவும் எதார்த்தமாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவரை மறைமுகமாக கண்காணித்து வந்தனர். அப்போது, முத்துமாரி அவரது கள்ளக்காதலனான செல்வராஜிடம் தொலைபேசியில் பேசியதையும், கணவனை எரித்து கொன்றது குறித்து பேசியபோது பிடிபட்டார். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். முத்துமாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர்.

 

Exit mobile version