சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சாதனைப் படைத்த தமிழக வீராங்கனை

ஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி வரை தகுதி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 15 வயது வீராங்கனைக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சரிதா தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8வயதிலிருந்தே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் சரிதா பல்வேறு போட்டிகளின் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் ஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியவின் சார்பில் சரிதா கலந்து கொண்டார். உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில் சரிதா, குழுவாகவும் தனிநபராகவும் விளையாடி 8 நபர்களுக்கான காலிறுதி போட்டியில் சீனா நாட்டு வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், தமிழகத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் காலிறுதிவரை தகுதி பெற்ற சரிதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Exit mobile version