அக்டோபரில் துபாயில் உலகின் மிகப்பெரிய ‘சர்வதேச விண்வெளி மாநாடு'

துபாயில் உலகின் மிகப்பெரிய ‘சர்வதேச விண்வெளி மாநாடு’ அக்டோபர் மாதம் நடைபெறும் என துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் பொது இயக்குனர் தெரிவித்தார்.

72-வது சர்வதேச விண்வெளி மாநாடு துபாய் உலக வர்த்தக மையத்தில் வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.

இந்த சர்வதேச மாநாட்டின் மூலம் விண்வெளித்துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள், விண்வெளி நிலையத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

Exit mobile version