சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கொடைக்கானலில், சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், கொடைக்கானலை சேர்ந்த 9 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். சர்வதேச கராத்தே போட்டியில், இலங்கை, வங்கதேசம், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

பல பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், கொடைக்கானலை சேர்ந்த மாணவர்கள் ஒரு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில், பதுக்கம் வென்று ஊர் திரும்பிய அவர்களுக்கு கொடைக்கானல் பேருந்து நிலையத்தில், பெற்றோர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version