அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் சர்வதேச பூஞ்சை, காளான் ஆராய்ச்சி மாநாடு

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச பூஞ்சை மற்றும் காளான் ஆராய்ச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.காளான்கள் வளர்ப்பு குறித்தும் அதன் உணவு மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் குறித்தும் இந்த மாநாட்டில் விளக்கப்பட்டது. காளான்களை வளர்க்கும் விதம், தொழிநுட்பரீதியாக பூஞ்சைகள் பயன்பாடு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்தும் கலந்துரையாடினர். இந்த மாநாட்டில் காளான் மற்றும் பூஞ்சை குறித்த ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் கையேடுகள் வெளியிடப்பட்டன. சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

Exit mobile version