சென்னையில் புத்தாண்டையொட்டி 300 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 300 இடங்களில், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், 300 இடங்களில் வாகன சோதனையிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதேபோல், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக்கியமான மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டாக இது அமைந்தது.

 

Exit mobile version