இலங்கை தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி : இந்திய கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணி

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, இந்திய கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில், கடலோர காவல் படை ஆய்வாளர் அன்னலெட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார், ஜவஹர், ரகுபதி ஆகியோர் குழுவாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரைப் பகுதியில் சந்தேகப்படும்படி யாரேனும் காணப்பட்டால் உடனடியாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தரும்படியும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version