வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

சென்னையில் தபால் வாக்களிக்க விண்ணப்பித்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 7ஆயிரத்து 300 பேரில், இதுவரை 6 ஆயிரத்து 156 பேரின் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 607 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் என 7 ஆயிரத்து 300 பேரின் தபால் வாக்குகள் வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 6 ஆயிரத்து 156 பேரின் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக பிரகாஷ் தெரிவித்தார்.

 

 

 

 

Exit mobile version