லட்சத்தீவு நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் பயணம்: கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

லட்சத்தீவு பகுதியை நோக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் படகில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்து இருப்பதை அடுத்து, கேரள கடல் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படும் 15 பேர் வெள்ளை நிறப் படகில் இந்தியாவின் கச்சத்தீவு நோக்கி சென்றதாக இலங்கை உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் விதமாக கேரள கடலோர காவல்படை சார்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கடலோர பகுதியில் உள்ள 72 காவல் நிலையங்களிலும் போலீசாருக்கு உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடல் பகுதியில் சந்தேகத்திற்குரிய படகுகளை கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version