ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் !

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும் கழக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், விடியா திமுகவினர் ஆட்சிக்கு வரும்போது பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து 21 மாதங்களாகியும் எந்த ஒரு வாக்குறுதியையும் செயல்படுத்தவில்லை எனவும், மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவைகளை உயர்த்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுகவினர் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக கூறினார்.

Exit mobile version