ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள முக்கிய விமானநிலையங்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், பதன்கோட் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமானநிலையங்கள் மற்றும் விமானப் படை தளங்களை குறி வைத்து ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் எச்சரிக்கை என்பது 2வது மிகப் பெரிய எச்சரிக்கை அறிவிப்பாகும். ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டால், குறிப்பிட்ட இடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளை மூடவும், அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு தடையும் விதிக்க வாய்ப்புள்ளது.

Exit mobile version