பாலியல் பலாத்காரங்களுக்கு உடனுக்குடன் தண்டனை: பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற, புது இந்தியா இளைஞர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பாலியல் பலாத்காரங்கள் குறித்து தற்போதும் கேள்விப்படுவது அவமானங்கொள்ள செய்வதாகவும், தற்போது குற்றவாளிகள் ஒரு மாதத்திற்குள் தூக்கிலிடப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். அதேபோல பாஜக ஆட்சியில் உரி தாக்குதலுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். இதுதான் மாற்றம் என தெரிவித்த பிரதமர், ராணுவ வீரர்களின் உள்ளத்தில் இருந்த நெருப்பு, தனது உள்ளத்தில் இருந்ததாகவும் அதன் விளைவே துல்லியத் தாக்குதல் என்றும் மோடி கூறினார்.

Exit mobile version