பூர்வகுடிகள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆய்வு

பூர்வகுடிகள் சான்றிதழ் வழங்குவது குறித்து அமைக்கப்பட்டிருக்கும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் உசிலம்பட்டி அருகே ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் சீர்மரபினர்,தங்களுக்கு டி.என்.டி எனப்படும் பூர்வகுடிகள் சான்றிதழ் கேட்டு பல வருடமாக போராடி வருகின்றன. அவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அரசு முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தலைமையிலான அக்குழுவினர் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்தான ஆய்வை 2 மாதத்துக்குள் முடித்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version