நெல்லைக் கண்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வலியுறுத்தல்

பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய நெல்லைக் கண்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லைக் கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நெல்லைக்கண்ணன் கைதுசெய்யப்பட்டார்.   நெல்லைக் கண்ணன் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை போதாது என்றும், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்றும், புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்  சக்திகுமாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Exit mobile version