அணு ஆற்றலில் இயங்கும் "ஐ.என்.எஸ் அரிஹந்த்" நீர்மூழ்கி கப்பல் – முதல் கண்காணிப்பு சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியது

அணு ஆற்றலில் இயங்கும் “ஐ.என்.எஸ் அரிஹந்த்” நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், பாகிஸ்தான் அதுதொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அணு ஆற்றலில் இயங்கும் திறன் கொண்ட இத்தகைய நீர்மூழ்கி கப்பல் இயக்கப்படுவது, தெற்காசிய பிராந்தியத்தில் இது முதல் முறை என்று கூறினார்.

இந்த நடவடிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கவலைக்குரிய விவகாரம் என்று கூறிய முகமது பைசல் இதனால், தெற்காசிய பிராந்தியத்திலும், அணு ஆயுத ரீதியாகவும் எழுந்துள்ள சவால்களை சமாளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version