தலைமைச் செயலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று தலைமை செயலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயலக ஊழியர்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாகவும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தலைமைச் செயலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அதன்படி, தலைமை செயலகத்தின் உள்ளே இருக்கக்கூடிய ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாகவும், இயந்திரங்கள் மூலமாகவும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல நாளையும் தலைமை செயலகம் முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்படவுள்ளது.

Exit mobile version