News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இயற்கை ஏன் இத்தனை கோபம் கொண்டது? என்ன தவறு செய்தான் மனிதன்

Web Team by Web Team
December 23, 2018
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இயற்கை ஏன் இத்தனை கோபம் கொண்டது? என்ன தவறு செய்தான் மனிதன்
Share on FacebookShare on Twitter

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழகம், அதுவரை சந்தித்திராத ஒரு பேரழிவை சந்தித்தது. இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதன் பின்னர் உருவான சுனாமியும் 2 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியது. தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். தமிழகத்தை சுனாமி தாக்கி இன்றுடன் 14 ஆண்டுகளாகும் நிலையில், அது பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்…

சுனாமி என்றால் என்னவென்றே தெரியாது நமக்கு. அந்த வார்த்தையே தமிழர்களுக்கு புதிது…

2004 டிசம்பர் 26க்குப் பிறகு சுனாமி என்றால் என்ன என்று தேடாத தமிழர்கள் இருக்க முடியாது…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகத்தை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. தமிழக கடற்கரையோரம் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே கரையைக் கடந்த கடல் அலைகள், நகருக்குள் புகுந்தது.

இயற்கை ஏன் இத்தனை கோபம் கொண்டது? என்ன தவறு செய்தான் மனிதன்? பொறுமைக்கு உதாரணமாக காட்டப்படும் பூமித்தாய் ஏன் அதிர்ந்தாள்? யாருக்கும் தெரியாது.

2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம்தேதி காலை இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ரிக்டர் அளவு கோளில் 9 புள்ளி 1 என்ற கணக்கில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தால் கடலில் பெரிய அளவிலான பேரலைகள் எழுந்தன. அவை தொடர்ச்சியாக கடற்கரையை நோக்கி வந்தன.இந்த அலைகள் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடற்கரை பகுதிகளை தாக்கியது.

மக்கள் நினைத்து பார்க்க இயலாத அளவுக்கு அலைகள் மேல் எழும்பின. ஒவ்வொரு நாட்டிலும் சில நிமிடங்கள் நீடித்த இந்த பேரலைகளின் தாண்டவத்தால், இந்திய துணைக் கண்டமே அதிர்ந்தது. உலகின் மோசமான இயற்கை பேரழிவில் இது 6வது இடத்தை பிடித்தது.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுனாமி தாக்கியது. இந்தியாவில் மட்டும் 12 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். தமிழகத்தில் 8 ஆயிரம் பேர் ஆழிப்பேரலைக்கு பலியானார்கள். சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஆர்ப்பரித்த அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டன. கடற்கரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் ஊருக்குள் உட்புகுந்தது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை இதேநிலைதான் காணப்பட்டது. சுனாமிக்கு தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம் தான்.

குழந்தைகள், முதியவர்கள் என வித்தியாசம் தெரியாத பேரலைகள், அனைவரையும் விழுங்கியது. அள்ளி அள்ளி உணவு கொடுத்த கடல் தாய் அடுத்த வேளை உணவுக்கே கையேந்த வைத்தாள் தன் பிள்ளைகளை.

ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையோரங்களில் மக்கள் சுனாமி நாளின் தாக்குதலை நினைவு கூர்கிறார்கள். ஆம், டிசம்பர் 26, 2004ஆம் ஆண்டு மறக்க கூடிய நாள் அல்ல.

Tags: disasterIndonesianational_disasternewsjnewsjtamiltsunamiஇந்தோனேஷியா
Previous Post

பீகாரில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உருவ பொம்மைகளை பாடை கட்டி தூக்கிச் சென்ற எதிர்க்கட்சியினர்

Next Post

என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் – அறவாணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் –  அறவாணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து

என் பேராசிரியர் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் - அறவாணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!

February 9, 2023
படியில் பயணம் நொடியில் மரணம் !

படியில் பயணம் நொடியில் மரணம் !

February 9, 2023
விடியா ஆட்சியில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!

விடியா ஆட்சியில் தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!

February 9, 2023
துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

துருக்கியில் இறப்பு எண்ணிக்கை 15000த்தை தாண்டியது!

February 9, 2023
குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

February 9, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version