இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். தெற்கு சுலவேசி மாகாணத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்தினால் தெற்கு சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்தோனேசியா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version