இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா

சிவகங்கையில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. பணியில் உள்ள வீரர்கள், புதிய வீரர்கள் என, மொத்தம் 144 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 44 வாரம் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில், பயிற்சி மையத்தின் தலைவர் ராகேஷ் குமார், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 5 வீரர்களுக்கு, விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இவ்விழாவில், நடைபெற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்து நடைபெற்ற வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு, காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. பயிற்சி முடித்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் தங்களை அர்பணித்து கொள்ள உள்ளனர்.

Exit mobile version