சந்தியாவின் தலையை 8-வது நாளாக தேடும் தனிப்படை போலீசார்

பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் கணவரால் கொலை செய்யப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தலையை 8-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் இருந்து வெட்டப்பட்ட கை மற்றும் கால்கள் மீட்கப்பட்டன. போலீசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது துணை நடிகை சந்தியா என்பதும், அவர் கணவரால் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாலகிருஷ்ணன் அவரை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் இருந்து சந்தியாவின் உடல் பாகங்களை மீட்டனர். தற்போது பாலகிருஷ்ணன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சந்தியாவின் இடுப்பிற்கு மேல் உள்ள உடல் மற்றும் இடதுகையோடு கூடிய தலைப்பகுதியை தேடும்பணி, 8வது நாளாக நடைபெறுகிறது. பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் தனிப்படை போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் சந்தியாவின் உடல்பாகங்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version