இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் அனுசரிப்பு – டெல்லியில் மன்மோகன், ராகுல், சோனியா உள்ளிட்டோர் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்பட்டவருமான இந்திரா காந்தியின் 34-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள சக்தி ஸ்தல் என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

Exit mobile version