சென்னையில் நடைபெற்ற இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாரத்தான் ஓட்டம் சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் பேர் பங்கேற்று ஓடினர்.

உடல் ஊனமுற்றோருக்காகவும், பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டும் சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னை, கோவை, ஐதராபாத் கோவா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரம் பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து காலையில் துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரம் பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் முதல் முறையாக அதிகளவில் ஊனமுற்றோர் கலந்து கொண்டனர். இவர்கள் 10 கிலோ மீட்டர் வரை பங்கேற்றனர்.

Exit mobile version