இந்தியாவில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி: தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாகப் பகலிரவாக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியின் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தியா, வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்க உள்ளது. இது இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாகும். இதையொட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் அன்று மாலை நடைபெறும் விழாவில் அபிநவ் பிந்த்ரா, மேரிகோம் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக வங்காள கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.

Exit mobile version