லண்டனில் "திருடன்" என கூறி விஜய் மல்லையாவை சூழ்ந்துக்கொண்ட இந்தியர்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வெளியேவந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை சூழ்ந்துக்கொண்டு திருடன் என இந்தியர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை பெற்றுவிட்டு அவைகளை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே இந்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியினால் அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மிண்டர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் லண்டனில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண ஓவல் மைதானத்திற்கு விஜய் மல்லையா வருகை தந்திருந்தார். போட்டி முடிந்து வெளியில் வந்த அவரை சூழ்ந்துக்கொண்டு திருடன் என இந்தியர்கள் முழக்கமிட்டனர். அப்போது செய்தியார்களிடம் பேசிய விஜய் மல்லையா, தனது தாயை காயப்படுத்த மாட்டேன் என கூறினார்.

Exit mobile version