இந்தியர்கள் அன்பானவர்கள்: விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது- மெலானியா டிரம்ப்

டெல்லியில் உள்ள சர்வோதயா பள்ளிக்கு சென்ற மெலானியா டிரம்ப், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சியை வெகுவாக ரசித்தார்.

சர்வோதயா பள்ளிக்கு சென்ற மெலானியா டிரம்புக்கு மாணவ மாணவிகள் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைநிகழ்ச்சிகளை அவர் ஆர்வத்துடன் பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மெலானியா டிரம்ப், நமஸ்தே என்ற வார்த்தையுடன் தனது பேச்சை தொடங்கினார்.

முதல்முறையாக இந்தியா வந்துள்ளதாகவும், இந்தியர்கள் அன்பானவர்கள் என்றும், விருந்தோம்பல் சிறப்பாக இருந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, மெலானியா டிரம்புக்கு சர்வோதயா பள்ளி மாணவிகள் ஓவியங்களை நினைவு பரிசாக வழங்கினர்.

Exit mobile version