கொரோனா வைரஸை கண்டுக்காமல் சீன பெண்ணை மணந்த இந்தியர்..!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி  வேளையில் சீன பெண்ணை மத்திய பிரதேச இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. பின்பு  இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி பல நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த மணப்பெண் வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதன்படி மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாண்ட்ஸர் வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என மருத்துவர்கள் தரப்பில் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்துகொரோனா வைரஸ் தாக்கம் இவர்களுக்கு இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.

 

 

Exit mobile version