பாகிஸ்தான் எல்லையில் இந்திய போர் விமானங்கள் பயிற்சி

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் இந்திய போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இதனையடுத்து இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான, எப் – 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி அத்துமீறலில் ஈடுபட்டால், பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில், இந்திய போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.

Exit mobile version