2020ல் ஓய்வு பெறப்போவதாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவிப்பு

2020ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளுடன் ஒய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் வெண்கலம் வென்றுள்ளார். டேவிஸ் கோப்பை தொடரில் இரட்டையர் போட்டிகளில் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட 44 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டுவரை நடக்க உள்ள சில டென்னிஸ் போட்டிகள் தமது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் அதன் பின்னர் ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் லியாண்டர் பயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version