தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி

நேபாளில் கடந்த மாதம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளைஞருக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.  

நேபாளில் நடைபெற்ற தெற்காசிய வாலிபால் போட்டியில், 8 அணிகள் இடம்பெற்று விளையாடின. இதில் இறுதிபோட்டியில், இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் வினித் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
 

Exit mobile version