2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மெல்பர்ன் நகரில் கடந்த 26-ம் தேதி இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னின்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களும், இந்திய அணி 326 ரன்களுடன் முதல் இன்னின்ஸை நிறைவு செய்தது இந்திய அணி.

2வது இன்னின்ஸிலும் ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு சுருண்டதால், 70 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. ரஹானே மற்றும் கில் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் இலக்கை எளிதில் அடைந்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Exit mobile version