3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்

இந்திய-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை, இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில், இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன. இதில், முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்தநிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Exit mobile version