இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியது

இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 230 புள்ளிகள் அதிகரித்து, 38 ஆயிரத்து 333 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிப்டி 56 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 368 புள்ளியாக வர்த்தகமாகி வருகிறது. உலகப் பங்குச் சந்தைகளும் இன்று ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்கப் பங்குச் சந்தை குறியீடான நாஸ்டேக் 7 ஆயிரத்து 872 புள்ளிகளுடனும், லண்டன் பங்குச் சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 77 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்குச் சந்தை குறியீடான CAC 5 ஆயிரத்து 438 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்குச் சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 925 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்குச் சந்தை குறியீடான NIKKEI, 21 ஆயிரத்து 337 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 969 புள்ளிகளுடனும், சீனப் பங்குச் சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 905 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version