திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ள இந்திய பங்குச் சந்தை

இந்திய பங்குச் சந்தைகள் திடீர் ஏற்றத்தை சந்தித்து, பங்கு சந்தை முதலிட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்நாட்டில் தொழில் தொடங்குவோர்களுக்கான வரி சலுகை அறிவிப்பை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகள் பெரும் எழுச்சியை சந்தித்துள்ளன. பெரும் அளவில் முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருவதால் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஆயிரத்து 800 புள்ளிகள் அதிகரித்து 37 ஆயிரத்து 953 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 449 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 154 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

Exit mobile version