இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா நோய்

லடாக் ராணுவ முகாமில் உள்ள 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 147 ஆக அதிகரித்துள்ளது. லடாக் ராணுவ முகாமில் உள்ள இந்திய ராணுவ வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

லடாக்கின் சுஹட் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர், கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விடுப்பில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ராணுவ வீரரின் தந்தை அண்மையில் ஈரானுக்கு புனித பயணம் சென்று திரும்பியதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக அவர் லடாக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராணுவ வீரருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் சகோதரி ஆகியோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

சோனம் நூர்போ நினைவு மருத்துவமனையில் ராணுவ வீரருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version