இங்கிலாந்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகள் விடுவிப்பு

சர்வதேச ஒப்பந்தத்தை மீறி ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தது. மேலும் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யவும் தடை விதித்தது.

இந்நிலையில் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை இங்கிலாந்து அரசு சிறை பிடித்தது. அந்த கப்பலில் இருந்த 24 இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களை உடனடியாக விடுவிக்க இந்திய அரசு இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் 24 மாலுமிகளையும் இங்கிலாந்து விடுவித்துள்ளது. மேலும் சிறை பிடிக்கப்பட்ட கப்பலையும் இங்கிலாந்து அதிகாரிகள் விடுவித்துள்ளனர்

Exit mobile version