பஞ்சாப் அணியை வீழ்த்தி இந்திய ரயில்வே அணி சாம்பியன்

திருவண்ணாமலையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண்கள் சீனியர் கைப்பந்து இறுதிப் போட்டியில் இந்திய ரயில்வே அணி வெற்றி பெற்றது

திருவண்ணாமலை மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் 47வது தேசிய அளவிலான ஆண்கள் சீனியர் கைப்பந்து போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர் மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் டெல்லி ஹரியானா பீகார் ஆந்திரா தமிழ்நாடு கேரளா மற்றும் இந்திய ரயில்வே அணி உள்ளிட்ட 29 மாநிலங்களைச் சேர்ந்த 700 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதிப் போட்டியில் இந்திய ரயில்வே அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் இந்திய ரயில்வே அணி 51 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவர் ராம சுப்பிரமணியன், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் ஆகியோர் கோப்பையை வழங்கி பாராட்டினர்.

Exit mobile version