தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி சாம்பியன்

தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகளின், ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்திய ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லி ஜூன் ஹூய், லியு யு சென் ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 21 க்கு 19 எனக் கைப்பற்றிய சத்விக்சாய்ராஜ் ஜோடி, 2 ஆவது செட்டில் 18 க்கு 21 என்ற புள்ளி கணக்கில் பறிகொடுத்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3 செட்டில், எழுச்சி கண்ட இந்திய ஜோடி, 21 க்கு 18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், பி.டபிள்யு எஃப் சூப்பர் 500 அந்தஸ்தில் இரட்டையர் பிரிவில் வென்ற முதல் இந்திய ஜோடியானது.

Exit mobile version