தமிழகத்தில் 5,125 புதிய பங்க்குகள், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கவுள்ள 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்க்குகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் 65 ஆயிரம் இடங்களில் புதிய பெட்ரோல் பங்க்குகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்க்குகள் புதிதாக தொடங்கப்படும் என்றார்.

விருப்பமுள்ளவர்கள் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார். www.petrolpumpdealerchayan.in வழியாக அனைவரும் விண்ணப்பிக்கும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version