கர்ப்பிணி பிரசவத்திற்கு உதவிய இந்திய கடற்படை

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு படகில் குழந்தை பிறக்க இந்திய கடற்படை உதவி செய்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா என்ற கிராமம் உள்ளது. இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவசரகால மருத்துவ உதவி தேவைப்பட்டதால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக கரையோர இந்திய கடற்படை தளத்தில் இருந்த அதிவேக படகினை இயக்கி கிராம உட்பகுதியில் இருந்த அந்த பெண்ணை மீட்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு படகிலேயே குழந்தை பிறந்தது. இதனையடுத்து அங்கிருந்த சமூக சுகாதார மையத்தில் இருவரையும் அனுமதித்த இந்திய கடற்படை வீரர்கள், தாயும் சேயும் நலம் என அறிந்த பின்னரே அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

 

 

 

Exit mobile version