கனடாவில் பாகிஸ்தானிற்கு எதிராக களமிறங்கிய இந்திய வம்சாவழியினர்

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக கனடாவில் இந்திய வம்சாவழியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக, கனடாவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பஸ்டன், சிந்தி, காஷ்மீரி மக்கள் மிஸ்ஸிஸ்சகா நகரில் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தீவிரவாதிகளின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பாகிஸ்தான் அரசு மனித உரிமைகளை மதிக்கக்கோரி, கனடா மற்றும் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை ஏற்காதபட்சத்தில் பாகிஸ்தானை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.

Exit mobile version