பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்-மத்திய அரசு

பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version