இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து தொடருக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், சளி, இருமல் இருந்த இந்திய அணி வீரர்கள் இருவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படட இரு வீரர்களில் ஒருவர் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரர், இங்கிலாந்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் இவர் 10 நாட்கள் தனிமை முடிந்து வருகிற 18ம் தேதி துர்ஹாமில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் 3 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

Exit mobile version