இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேரைக் கடலோரக் காவல் படையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ரோந்து சென்ற இந்தியக் கடலோரக் காவல்படையினர் 8 படகுகளில் இருந்த இலங்கை மீனவர்கள் 18 பேரைக் கைது செய்தனர். இலங்கை மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேதாரண்யம் காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

Exit mobile version