இஸ்லாமாபாத் செல்கிறார் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் இன்று இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இதேபோல் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் டெல்லி திரும்புகிறார்.

புல்வாமா தாக்குதல் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்தது. இதனால் பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை, இந்தியா திரும்ப பெற்றது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும் அந்நாடு திரும்ப அழைத்துக்கொண்டது. இதனிடையே தற்போது பதற்றம் தணிந்த நிலையில் பாகிஸ்தான் தங்கள் நாட்டு தூதரை இந்தியாவுக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தது. இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு அதற்கு அனுமதியளித்தது. இதையடுத்து இந்திய தூதர் அஜய் பிசாரியா இன்று இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். இதேபோல் பாகிஸ்தான் தூதர் சுகைல் மஹ்மூத் டெல்லிக்கு திரும்புகிறார்.

Exit mobile version