இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

புணேயில் நேற்று நடைபெற்ற கடைசி இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷிகர் தவான், கேஎல்.ராகுல் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 54 ரன்களிலும், தவான் 52 ரன்களிலும் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஹஸரங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். மிடில் ஆர்டர் வீரரான ஷ்ரேயாஸ் ஐயரும் நிலைத்து ஆடவில்லை. அவர், சண்டகன் பந்துவீச்சில் 4 ரன்களுடன், அவரிடமே கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து கேப்டன் கோலியும்-மணிஷ் பாண்டேயும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். கோலி 26 ரன்களில் ரன் அவுட் ஆக, ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த சர்துல் தாக்குர், மணிஷ் பாண்டே இணை, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை இந்திய அணி எடுத்தது.

Exit mobile version