இந்தியா – மேற்கிந்திய தீவு 2 வது டெஸ்ட் போட்டி: முதல் நாள் முடிவில் இந்தியா 264 ரன்கள்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

ஜமைக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 13 ரன்களிலும், புஜரா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் தொடக்க வீரர் மாயங் அகர்வாலும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version