இன்று 5-வது ஒருநாள் போட்டி – இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?

இந்தியா-மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கடைசி போட்டியை வென்று தொடரை சமனில் முடிக்க வேண்டிய நெருக்கடிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version