உலககோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்கள் இலக்கு

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் லீக் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. வரலாற்று வெற்றியை தொடர இந்திய அணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தானும் இன்றைய போட்டியில் களமிறங்கி ஆடி வருகின்றன.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா அற்புதமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறிலும் இந்திய அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Exit mobile version